செய்திகள் :

உ.பி.யில் சாக்கடை அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள் !

post image

உத்தரப் பிரதேசத்தில் சாக்கடை அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹதபஜார் பகுதியில் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் குழந்தையை துணியில் சுற்றி யாரோ சாக்கடை அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் குழந்தையைக் கடித்து குதறியுள்ளனர். இதில் அந்த குழந்தை இறந்தே விட்டது.

இதனைக் கண்ட பெண் ஒருவர் தனது தந்தை தாஹிரிடம் கூறியிருக்கிறார். அவர் நாய்களை விரட்டிவிட்டு மற்ற உள்ளூர்வாசிகளுக்குத் தகவல் அளித்தார். பின்னர் தாஹிர் ககாஹா போலீஸைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் குழந்தையின் உடலை மீட்டனர்.

குஜராத் பால விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு

முதற்கட்ட விசாரணையின்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் வயது மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது, அவர்கள் பரிசோதனைக்காக குழந்தையின் மாதிரிகளை சேகரித்தனர்.

அருகிலுள்ள சிசிடிவி முழுமையாக ஆய்வு செய்து குழந்தையின் உடல் அந்த இடத்தில் எப்படி வந்தது என்பதைக் கண்டறியும் என்று போலீஸ் அதிகாரி சுஷில் குமார் தெரிவித்தார். உடற்கூராய்வுக்கு அறிக்கைக்குப் பிறகு மேலும் விவரங்கள் வெளிவரும். விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

An newborn baby was allegedly mauled by stray dogs to death and left near a drain in Hatabazar area, police said on Friday.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க