செய்திகள் :

உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம்! பிரான்ஸ் வலியுறுத்தல்

post image

உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின், உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேக்ரான் கூறியிருப்பதாவது, “உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ நாங்கள் விரும்புகிறோம். இதனை அடைய, ரஷியா தமது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

மேலும், உக்ரைன் மக்களுக்கு வலிமையான நம்பிக்கையளிக்கும் விதத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கிடவும் வேண்டும். இல்லையெனில், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அது ‘மின்ஸ்க் ஒபந்தங்கள்’ போல முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவோம். இதுவே சிறந்த வழி” என்றார்.

மேலும், “ஐரோப்பிய நாடுகள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்காக அதிகம் முதலீடு செய்தாக வேண்டுமென்ற கருத்திலும் உடன்படுகிறோம். ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவுகளை ஏற்று, அதன்படி உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அதற்கான முதலீட்டு நடவடிக்கைக்கான பணிகள் சுணக்கமின்றி நடைபெறும்” என்றார்.

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது.அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்த... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பன்னீர் செல்வம் பரந்தா... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க