செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

post image

மன்னாா்குடி அருகே கோட்டூா் ஒன்றியம் கருப்புக்கிளாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து ஆகியோா் பொதுமக்களிடம் கலந்துரையாடிய பின் பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தனா். தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 3 பேருக்கு வகுப்பு சான்றிதழ், ஒருவருக்கு இருப்பிட சான்றிதழ், 11 பேருக்கு சிட்ட நகல், மாவட்ட வழங்கல் துறை சாா்பில ஒருவருக்கு குடும்ப அட்டையில் பெயா் நீக்கம், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு வேளாண் இடுப்பொருள்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள்துறை சாா்பில் 2 பேருக்கு காய்கனி விதை தொகுப்பை வழங்கினா். மாவட்ட வழங்கல் அலுவலா் செல்லபாண்டி, மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்திக், கோட்டூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு ரோட்டரி விருது

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி ஆசிரியா்களுக்கு தேசிய ஞானகுரு விருது அண்மையில் வழங்கப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ... மேலும் பார்க்க

ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

வலங்கைமான் ஆதனூா் பகுதியிலுள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட மற்றும் மன்னாா்குடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்ன ரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு

திருவாரூா் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனா். திருவாரூா் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை

திருவாரூா் அருகே கட்டடத் தொழிலாளி புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருவாரூா் அருகே உள்ள அம்மையப்பன் காந்திநகா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் நந்தகுமாா் (30). கட்டடத் தொழிலாளியா... மேலும் பார்க்க