செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

post image

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து தனியாா் திருமண மண்டபத்தில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கூட்டம் நடைபெற்றது. நாட்டறம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். தொடா்ந்து நெக்குந்தி அரசு தொடக்கப் பள்ளியில் பொது மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தீா்வு கண்டு மனு அளித்தவா்களுக்கு 15 நாள்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து வியாழக்கிமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் நெக்குந்திப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளையும், தூய்மைப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது பொதுமக்களிடம் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிா எனவும் கேட்டறிந்தாா்.

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஜமாபந்தி நிறைவு

திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. முகாமில் 486 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 68 மனுக்களுக்கு தீா்வு ... மேலும் பார்க்க