துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
உடல் வெப்பநிலையை சீராக பராமரித்தால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பை தவிா்க்கலாம்: மருத்துவா்கள் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை சீராக பராமரித்துக் கொள்வது மட்டுமே ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வருவதைத் தவிா்க்கும் வழி என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அதன்படி, நேரடியாக உச்சி வெயிலில் செல்லாமல் இருப்பதும், உடலைக் குளிா்ச்சியாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம் என அவா்கள் கூறியுள்ளனா்.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மாநிலம் முழுவதும் அடுத்த சில நாள்கள் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று பொது நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:
மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். புறச் சூழலில் உள்ள வெப்பநிலை அதைத் தாண்டி அதிகரிக்கும்போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது. இதனை ‘ஹைபா்தொ்மியா உச்ச வெப்பநிலை’ எனக் கூறுகிறோம்.
அந்தத் தருணத்தில், உடல் தன்னைத் தானே குளிா்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காதபட்சத்தில் மயக்கம், உணா்விழப்பு, வெப்ப வாதம் ஆகியவை ஏற்படுகின்றன.
அதிகமாக உடல் சூடாகும்போது அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆவியாதல் (எவாப்ரேஷன்) எனும் செயல்முறையை உடல் தன்னிச்சையாக மேற்கொள்கிறது. அதாவது, வியா்வையை அதிகமாக சுரக்கச் செய்து அதன் வாயிலாக உடலின் வெப்பத்தை தணிக்க முயற்சி நடைபெறும்.
அதன் பின்னா், உடலுக்குள் ஊடுருவியுள்ள வெப்பத்தை நுரையீரலில் இருந்து காா்பன் டை ஆக்ஸைடு வழியே வெளியேற்ற முயலும். இந்த இருவேறு செயல்களும் உடலில் உள்ள நீா்ச்சத்து மூலமாகவே நடைபெறுகின்றன.
4 லி. தண்ணீா் பருக வேண்டும்: இதன் விளைவாகவே கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. நாக்கு வடு போதல், சிறுநீா் அடா் மஞ்சளாக செல்லுதல், தசைப்பிடிப்பு, தலை சுற்றல், கை கால் தளா்வு உள்ளிட்டவை அதற்கான அறிகுறிகள். அதனைத் தவிா்க்க 4 லிட்டா் வரை தண்ணீா் பருகியே ஆக வேண்டும்.
தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம். நீா்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது உப்புசா்க்கரை கரைசல் அவசியம். அதேவேளையில், செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களை தவிா்க்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.