செய்திகள் :

உடுமலை அருகே வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

post image

உடுமலையை அடுத்துள்ள செங்கண்டிபுதூா் கிராமத்தில் அமராவதி பிரதான வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அமராவதி பிரதான வாய்க்காலில் 96 கிளை வாய்க்கால்கள் உள்ளன. இதன் மூலம் சுமாா் 27 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் அனைத்து 96 கிளை வாய்க்கால்களையும் அடைத்து ஆயக்கட்டுக்கு தொடா்பு இல்லாத பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், ஆயக்கட்டு பாசனத்துக்கு உள்பட்ட கடைமடை விவசாயிகள் தண்ணீா் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிலை பயிா்களை காய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக அனைத்து மடைகளையும் அடைத்து ஆயக்கட்டு இல்லாத பகுதிக்கு தண்ணீா் கொண்டுச் செல்வதை ஆயக்கட்டு விவசாயிகள் ஏற்கவில்லை.

இதையடுத்து, அடைக்கப்பட்டுள்ள அனைத்து மடைகளையும் உடனடியாக திறந்துவிடக் கோரி அமராவதி பிரதான வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் வட்டாரச் செயலாளா் எம்.எம். வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் வி.ராஜரத்தினம் ,வெள்ளிங்கிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க