இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை அழைத்துவர நடவடிக்கை: மீன்வள...
`உணர்வுகள் நிலைத்திருக்குமா?'- கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட வழிகாட்டல்
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா... இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/5qtn8yym/kumbam.jpeg)
கும்பம்: கும்பராசிக்காரர்கள் அடுத்த ஓர் ஆண்டுக்குப் புதிய காதல் முயற்சிகளில் இறங்காமல் இருப்பது நல்லது. இரண்டாம் வீட்டுக்கு உரிய குருபகவான் 4-ம் வீட்டில் இருக்கிறார். அதேவேளையில் 4 க்கு உரிய சுக்கிரன் 2 -ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே இந்தப் பரிவர்த்தனை யோகம் காதல் போன்ற உணர்வுகளைக் கொடுத்தாலும் அது நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. எனவே காதல் முயற்சிகளைக் கைவிட்டு அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். ராசி நாதன் சனிபகவான் சனிப்பெயர்ச்சிக்குப் பின் இரண்டாம் இடம் சென்ற பின்னும் மேமாதம் குருபகவான் 5 -ம் இடம் சென்ற பின்னும் காதல் குறித்து சிந்திக்கலாம். அதன் பின் பிரபோஸ் செய்வது சாதக பலன்களைக் கொடுக்கும்.