செய்திகள் :

உணவு விநியோக ஊழியர்களுக்கு ஏசி ஓய்வறைகள்: சென்னை மாநகராட்சி

post image

சென்னை: சென்னையில் உணவு விநியோக ஊழியர்களுக்கான தங்கும் ஓய்வறைகள் அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவிருக்கிறது.

தமிழகத்தில் முதல் முறையாக, உணவு விநியோக ஊழியர்களுக்காக அதுவும் குளிர்சாதன வசதிகொண்ட ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் அண்ணாநகர், கே.கே. நகர், மயிலாப்பூர், தி.நகரில் ஓய்வறைகள் அமைக்கப்படும் என்றும் 600 சதுர அடியில் 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ஓய்வறைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வறைகளை ஒரே நேரத்தில் 25 பேர் பயன்படுத்தும் வகையிலும் வாயிலில் 20 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு விநியோக ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதால், சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

பாஜக கூட்டணியில் இறுதிவரை இருப்பாரா இபிஎஸ்? - அப்பாவு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இறுதிவரை கூட்டணியில் இருப்பாரா என்பதே கேள்விக்குறி என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க வ... மேலும் பார்க்க

நியாய விலைக்கடை விற்பனையாளர் பணி: நேர்முகத் தேர்வு அறிவிப்பு!

சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் நடத்தும் விற்பனையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

கனமழை: 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.தமிழக... மேலும் பார்க்க

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்!

மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு – உயர்சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்புவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுத... மேலும் பார்க்க

தமிழகத்தில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால் தமிழகத்தில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையினால்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 ... மேலும் பார்க்க