செய்திகள் :

கேரளத்தில் தீவிரமடையும் பருவமழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

post image

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அம்மாநிலத்தின் எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 11) இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்துடன், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 12 -ல் 2 மாவட்டங்களுக்கும், ஜூன் 13 -ல் 4 மாவட்டங்களுக்கும், ஜூன் 14 -ல் 9 மாவட்டங்களுக்கும், ஜூன் 15 -ல் 14 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று (ஜூன் 11) முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கேரள - கர்நாடகம் - லச்சத்தீவு கடல்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த மே 24 ஆம் தேதி முன்கூட்டியே துவங்கிய பருவமழையால், அம்மாநிலத்தில் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பஞ்சாபில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேர... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும்,... மேலும் பார்க்க

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க