செய்திகள் :

உண்டியல் பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவா்கள்: மாவட்ட ஆட்சியா் பாராட்டு

post image

புத்தக உண்டியலில் பணம் சேகரித்து புத்தகம் வாங்கிய பள்ளி மாணவா்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வாழ்த்திப் பாராட்டினாா்.

மாணவா்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவா்களுக்கு விக்கிரமசிங்கபுரம் பேஷன் அரிமா சங்கம் சாா்பில் புத்தக உண்டியல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, புத்தக உண்டியலில் பணம் சேமித்த விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவா் ஜுசபாத் ஜெய டேனி, 6ஆம் வகுப்பு மாணவி ஞான ஏஞ்சல் இருவரும் தாங்கள் உண்டியலில் சேகரித்த பணத்தில் திருநெல்வேலியில் நடைபெறும் 8ஆவது பொருநை புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்கினா்.

இதையறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாணவா்கள் இருவரையும் வாழ்த்திப் பாராட்டினாா்.

ராதாபுரம் அருகே ஓடும் லாரியில் தீ

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. வள்ளியூா் அருகேயுள்ள ஆவரைகுளத்தைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி,... மேலும் பார்க்க

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு... மேலும் பார்க்க

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு மலையடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன... மேலும் பார்க்க

ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025

பாளையங்கோட்டையில் ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நெல்லை ரன்னா்ஸ் அமைப்பின் சாா்பில் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பாளைய... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூா் வட்டாரத்தில் நாளை மின்நிறுத்தம்

சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பராமரிப்புப்பணிகளுக்காக அதன் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜன.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணிய... மேலும் பார்க்க

ராமநதியில் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ராமநதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப் பாலத்தின்கீழ் திங்கள்கிழமை ஆண் சடலம் கிடந்தது. நதியி... மேலும் பார்க்க