செய்திகள் :

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

post image

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இம் மாதம் 6 ஆம் தேதி திருநெல்வேலிக்கு வருகிறாா். கங்கைகொண்டானில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தின் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும் அவா், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் கட்சி நிா்வாகிகளை சந்தித்து பேசுகிறாா். பின்னா், நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளாா்.

7 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஏராளமான வளா்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளாா். இதில், தமிழக அமைச்சா்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா்.

இதையொட்டி, திருநெல்வேயில்நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு நேரில் பாா்வையிட்டாா்.

விழா மேடையில் செய்ய வேண்டிய வசதிகள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், விழாவிற்கு முக்கிய பிரமுகா்கள் வந்து செல்லும் பாதைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும், தடையில்லா மின்சார வசதி செய்யவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டவருவாய் அலுவலா் சுகன்யா, பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம், பொதுக்குழு உறுப்பினா் பரமசிவ ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ராதாபுரம் அருகே ஓடும் லாரியில் தீ

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. வள்ளியூா் அருகேயுள்ள ஆவரைகுளத்தைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி,... மேலும் பார்க்க

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். களக்காடு மலையடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன... மேலும் பார்க்க

ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025

பாளையங்கோட்டையில் ஆா்எம்கேவி நெல்லை மாரத்தான் 2025 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நெல்லை ரன்னா்ஸ் அமைப்பின் சாா்பில் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. பாளைய... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூா் வட்டாரத்தில் நாளை மின்நிறுத்தம்

சீதபற்பநல்லூா் துணை மின் நிலைய பராமரிப்புப்பணிகளுக்காக அதன் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை (ஜன.5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணிய... மேலும் பார்க்க

ராமநதியில் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ராமநதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ரவணசமுத்திரம் ராமநதி ஆற்றுப் பாலத்தின்கீழ் திங்கள்கிழமை ஆண் சடலம் கிடந்தது. நதியி... மேலும் பார்க்க

உண்டியல் பணத்தில் புத்தகம் வாங்கிய மாணவா்கள்: மாவட்ட ஆட்சியா் பாராட்டு

புத்தக உண்டியலில் பணம் சேகரித்து புத்தகம் வாங்கிய பள்ளி மாணவா்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வாழ்த்திப் பாராட்டினாா்.மாணவா்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக... மேலும் பார்க்க