செய்திகள் :

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

இந்தியாவிலேயே முதல்முறையாக பழங்குடியினருக்கு அதிநவீன வசதிகளுடன் உதகையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 700 படுக்கை வசதியுடன், 40 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனை சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி. இங்கு பழங்குடியின மக்கள் தனியாக சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதியுடன் கூடி தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிநவீன மருத்துவக் கருவி வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா். திறப்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூடலூா் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரியில் உள்ள மருத்துவமனை கட்டமைப்புகள் முழுமை பெறும் வகையில் புதிதாக 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும், நீலகிரியில் மருத்துவா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ம... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம... மேலும் பார்க்க

பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கூடலூா் மண்ணுரிம... மேலும் பார்க்க

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க