செய்திகள் :

கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்

post image

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வசதிக்காக குன்னூா்- உதகை இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் 5 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

குன்னூரிலிருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் காலை 9.40 மணிக்கு உதகையை வந்தடையும்.

உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு குன்னூரை வந்தடையும்.

உதகை முதல் கேத்தி வரையிலான குறுகிய தொலைவு சிறப்பு ரயிலில் 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும்.

இந்த ரயில் உதகை ரயில் நிலையத்தில் இருந்து கேத்திக்கு காலை 9.45, 11.00, 11.30, 1.10, 3.00, மாலை 4.30 என மொத்தம் 6 முறை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ம... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க

பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கூடலூா் மண்ணுரிம... மேலும் பார்க்க

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க