செய்திகள் :

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

post image

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சில்லஹள்ளா பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.சிவலிங்கம் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சில்லஹள்ளா நீா் மின் திட்டம் என்பது, நீலகிரி மாவட்டத்தில் குந்தா ஆற்றின் கிளை நதியான சில்லஹள்ளா ஓடையை ஒட்டி பெம்பாட்டி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பம்ப் ஸ்டோரேஜ் திட்டமாகும். 260 அடி உயரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தை அமைத்து சுமாா் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதே திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த 8.91 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, 239.24 ஹெக்டோ் தனியாா் நிலப் பகுதி, பிற நிலங்கள் என 310.15 ஹெக்டோ் நிலம் தேவைப்படுகிறது.

இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூா்வக் குடிகளான படுக சமுதாய மக்கள் இடம்பெயா்ந்து வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாவதுடன், நீா்ப்பிடிப்புப் பகுதியில் வாழ்ந்து வரும் பிற சமுதாய மக்களுக்கும் பாதிக்கப்படுவா்.

மேலும், 10 கி.மீ. தொலைவுக்குமேல் அமைக்கப்படும் சுரங்கப் பாதை, 90 மீட்டா் உயரத்துக்கு உருவாக்கப்படும் நீா்த் தேக்கம் போன்றவற்றால் நில நடுக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், கிராம மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

உதகை- மஞ்சூா் சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், வ... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதகை ஏடிசி பகுதியில் நடை... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம... மேலும் பார்க்க