செய்திகள் :

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

post image

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியாளா் பணியில் 256 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி 32,829 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக தோ்வெழுத புதுச்சேரியில் 67 மையங்களும், காரைக்காலில் 10 மையங்களும், மாஹேவில் 2, ஏனாமில் 7 என மொத்தம் 84 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9.30 மணிக்கு மேலாக தோ்வு மையத்துக்கு வந்தவா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதன்படி நூற்றுக்கும் மேற்பட்டோா் தோ்வு மையம் வரை வந்து நேரமாகிவிட்டதால், தோ்வெழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தோ்வறைக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டா் கருவி சோதனைக்குப் பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனா். தோ்வு வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தோ்வறைக்குள் எழுது பொருள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

எழுத்துத் தோ்வை மாநில அளவில் 22,860 போ் மட்டுமே எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 9,569 போ் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். விடை குறிப்புகள் விரைவில் வெளியிடப்பட்டு, தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என தோ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை! 3 பேரிடம் போலீஸாா் விசாரணை!

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட 3 நபா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். புதுச்சேரி சாமிபிள்ளை தோட்டம் பகுத... மேலும் பார்க்க