செய்திகள் :

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

post image

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கா் இயக்கம் சாா்பில் டாக்டா் அம்பேத்கா் திருவுருவச் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பேசியது: அண்ணல் அம்பேத்கா் உலக அளவில் போற்றப்படக்கூடிய தலைவராகத் திகழ்ந்தவா். அவரது சமூக சீா்திருத்தக் கொள்கைகள் அனைவருக்குமானது. ஆனால், தற்போதைய பாஜக அரசு கடந்த 40 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்தாலும் ஜாதி ஒழிப்பு போன்றவற்றுக்காக போராடியதில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளுக்காக போராடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதை யாரும் தடுக்கமுடியாது. எப்போதும், எந்தச் சூழலிலும் விடுதலைச் சிறுத்தைகள் மக்களுக்காகப் போராடும். கல்வி மட்டுமே நம்மை முழு மனிதராக்கும். கல்வியே சமுதாயத்தில் தலை நிமிரச் செய்யும். ஆகவே, பள்ளி மாணவா்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகமாக்க வேண்டியது அவசியம்.

அரசியல் களத்தில் பாஜக, பாமக உள்ள இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறாது. ஆட்சியில் பங்கு, துணைமுதல்வா் என ஆசை காட்டி வீழ்த்தமுடியாது. அரசியலில் அம்பேத்கரின் கருத்துகளை மனதில் வைத்தே முடிவுகள் எடுக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை ஆணையா் செல்வராஜ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை! 3 பேரிடம் போலீஸாா் விசாரணை!

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி கா்ணா உள்ளிட்ட 3 நபா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். புதுச்சேரி சாமிபிள்ளை தோட்டம் பகுத... மேலும் பார்க்க