சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!
உறவும் நட்பும்! - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சே! என்ன வாழ்க்கை இது??!! என்ன மனிதர்கள் இவர்கள்???!!! உறவுகளும் அப்படித்தான்., நண்பர்களும் அப்படித்தான். காரியம் என்றால் குழைகிறார்கள்…! காரியம் ஆனதும் கவுந்தடிச்சுப் படுத்துக் கொண்டு கண்டுக்காம இருந்து விடுகிறார்கள்.
இனிமேல்… “ No more friends and no more relatives!” என்றான் வசந்தன் வாழ்க்கை வெறுத்துப் போய்.
காதுகளில் கடவுளின் கனிவான குரல் அசரீரியாய்….” No more friends .. என்று வேணாச் சொல்!., no more relatives என்று சொல்லாதே! காரணம் ‘நண்பர்களை வேணா நீ தீர்மானிக்கலாம்!., ஆனால் உறவை நான்தான் தீர்மானிக்கிறேன்! என்றது குரல்.
என்ன வேணுமானாலும் கடவுள் சொல்லட்டும்., ஆனால், மனசு கேட்க மாட்டேங்குதே?!’ என்ன செய்ய?!!
‘என்ன உன் பிரச்சனை?’
‘உறவும் நட்பும் காசுக்காகத் தானே பல்லிளிக்கிறது??’
உண்மைதான்! ஆழ யோசித்தால் நீ நினைப்பது சரிதான். உறவும் நட்பும் காசைக் கருதித்தான்.
ஆனால், உறவையும் நட்பையும் ‘ மகசூல்தரும் ‘காசு’ என்று மனக்கோட்டை கட்டாதே! வசூல் வழங்கும் வட்டியல்ல… உறவும், நட்பும்! அவை ஒருவகையில் மகிழ்ச்சி தரும் அந்தஸ்தைக் கொடுக்கும் முதலீடுகள்! அவ்வளவே!.
‘உறவின், நட்பின் பலம் அடுக்கு மாடியின் அஸ்திவாரம் போல…! அதை அழகு பார்க்கலாம்., அதன் ஆழம் பார்க்கவோ .. அசைத்துப் பார்க்கவோ கூடாது!’
‘அசரீரிகள்’ ஆண்டவன் குரலாய் அடிமனதிலிருந்து ஒலிக்கின்றன!. அதை ‘ஆழ்மன வெளிப்பாடு!’ என்றாலும் ‘ஆன்மிக புலப்பாடு!’ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.