செய்திகள் :

உலக சாதனைக்கு முயன்ற இந்திய வீரர் பலி!

post image

உலக சாதனைக்கு முயன்ற இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சிலி நாட்டில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

தென் அமெரிக்க கண்டத்தில் அதிவேகமாக 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனைப் படைக்க முயன்ற இந்திய வீரரான மோஹித் கோலி (வயது 36) கடந்த பிப்.12 சாலை விபத்தில் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜன.22 அன்று தனது சாதனை முயற்சிக்கான பயணத்தை கொலம்பியா நாட்டின் கார்டாகெனாவில் துவங்கிய அவர் பெரு, ஈக்வடார் ஆகிய நாடுகளைக் கடந்து தற்போது சிலி நாட்டில் தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சிலியின் டமாருகள் மாகாணத்தின் தலைநகரான போஸோ அல்மோண்ட்டேவிலுள்ள அந்நாட்டின் மிக நீண்ட சாலையான ரூட் 5 இல் கடந்த பிப்.12 அன்று தனது சைக்கிளில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது, காலை 8.30 மணியளவில் அவ்வழியாக வந்த சிறிய பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அந்நாட்டு அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது பயணம் முழுவதையும் அவரது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். கொலம்பியாவின் கார்டாகெனாவில் துவங்கிய அவரது பயணம் ஆர்ஜென்டீனா நாட்டின் உஷூயா நகரத்தில் முடிவுப்பெறுவதாகயிருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிவேகமாக தென் அமெரிக்காவை 41 நாள்கள், 41 நிமிடங்களில் சைக்கிளில் கடந்த ஆஸ்திரியா நாட்டின் மைக்கல் ஸ்ட்ராஸரின் உலக சாதனையை முறியடிக்கும் நோக்கில் மோஹித் இந்த பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!

பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை கொலைச் சம்பவம் தொடர்பாக தன்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 15) ரூ. 800 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ. 8060-க்கும், பவுனுக... மேலும் பார்க்க

நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? ப. சிதம்பரம் கேள்வி

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்கள... மேலும் பார்க்க

சத்தீஸ்கரிலிருந்து கும்பமேளா சென்றவர்கள் கார் விபத்து: 10 பேர் பலி!

மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். மேலும் பார்க்க

இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியின் குரலே,பா.ஜ.க.விற்கான டப்பிங்குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க