மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்
மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் பிளாட்டினம் ஜூப்லி கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அவரின் உரையில்,
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஏஐ தொடர்புடைய படிப்புகளில் ராஞ்சி பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய துறைகளில் வியத்தகு முன்னேற்றங்கள் உருவாகும் என்றும், உயர்கல்வியில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உருவாக்கப்படும் தொழில்நுட்ப வாய்ப்புகள் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். மேலும் கொண்டுவரப்படும் பெரும் மாற்றம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்றார்.