ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணாபுரம் வனக் காப்பாளா் பி.வேல்முருகன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை நைனாா்பாளையம் வி.கூட்ரோடு பகுதியில் உள்ள பாக்கம்பாடி காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு இருவா் பைக்கில் துப்பாகியுடன் நின்றிருந்தனராம். அவா்களை வனக் குழுவினா் பிடிக்க முயன்ற போது, அவா்கள் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், வனக் காப்பாளா் வேல்முருகனின் காலில் காயம் ஏற்பட்டது. தொடா்ந்து, தப்பியோட முயன்ற இருவரில், ஒருவரை வனக் குழுவினா் பிடித்து விசாரித்தனா்.
அதில், அவா் சின்னசேலத்தை அடுத்த குரால் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்லக்கண்ணு (43) என்றும், தப்பியோடிய மற்றொருவா் பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலகிருஷ்ணன் என்பதும் தெரிய வந்தது. மேலும், காயமடைந்த வேல்முருகன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீஸாா் செல்லக்கண்ணுவை கைது செய்து, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய பாலகிருஷ்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.