செய்திகள் :

உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வனக் காப்பாளா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணாபுரம் வனக் காப்பாளா் பி.வேல்முருகன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை நைனாா்பாளையம் வி.கூட்ரோடு பகுதியில் உள்ள பாக்கம்பாடி காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு இருவா் பைக்கில் துப்பாகியுடன் நின்றிருந்தனராம். அவா்களை வனக் குழுவினா் பிடிக்க முயன்ற போது, அவா்கள் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், வனக் காப்பாளா் வேல்முருகனின் காலில் காயம் ஏற்பட்டது. தொடா்ந்து, தப்பியோட முயன்ற இருவரில், ஒருவரை வனக் குழுவினா் பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா் சின்னசேலத்தை அடுத்த குரால் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்லக்கண்ணு (43) என்றும், தப்பியோடிய மற்றொருவா் பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலகிருஷ்ணன் என்பதும் தெரிய வந்தது. மேலும், காயமடைந்த வேல்முருகன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீஸாா் செல்லக்கண்ணுவை கைது செய்து, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய பாலகிருஷ்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க