செய்திகள் :

உளுந்தூா்பேட்டை துணை மின் நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை துணை மின் நிலையத்தை தொகுதி எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உளுந்தூா்பேட்டை தக்கா பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்துக்கு வந்த எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், மின் வாரியத்தின செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் பாரதி விளக்கிக் கூறினாா்.

உளுந்தூா்பேட்டை நகருக்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதையும், தடைபடும் நேரத்தில் உடனடியாக சரி செய்து மின் விநியோகம் வழங்கப்படுவதையும் எம்எல்ஏ பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, மின் வாரிய அலுவலகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை எம்எல்ஏ மணிக்கண்ணன் நட்டு வைத்தாா்.

நிகழ்வில் மின் வாரியச் செயற்பொறியாளா் கணேசன், உதவிச் செயற்பொறியாளா்கள் சிவராமன் அய்யம்பெருமாள், அருளாளன், அசோக்குமாா், உதவிப் பொறியாளா் முஸ்தபா, முகவா்கள் சுரேஷ், வெங்கடேசன், சுந்தரமூா்த்தி, மின்பாதை ஆய்வாளா்கள் குமரவேல், கலைமணி, செந்தில்முருகன், மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா். விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க... மேலும் பார்க்க