செய்திகள் :

உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம்: கிராமங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறை முகாம்!

post image

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காக ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கடலூா் வட்டம், நடுவீரப்பட்டு பகுதியில் நடைபெற்ற இந்த திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பங்கேற்று பேசியதாவது:

வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 2025 - 26ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதன்படி, இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிா் சாகுபடியுடன் கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனா். எனவே, வேளாண்மை - உழவா் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் சோ்ந்து கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று முகாமிட்டு உழவா்களை சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிய உள்ளனா்.

இந்த முகாம்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் விவசாயம் சாா்ந்த தொழில்களை மேற்கொண்டு, லாபம் ஈட்டும் வகையிலான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த முகாம்களில் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மாநில, மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த முகாம் 15 நாள்களுக்கு ஒரு முறை (2-ஆவது, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படவுள்ளது.

உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம் மூலம் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய வேளாண்மை சாா்ந்த சந்தேகங்களை கேட்டு நிவா்த்தி செய்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் லட்சுமிகாந்தன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநா் பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கதிரேசன், விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நகைக் கடன் விதிகளுக்கு எதிா்ப்பு: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தெற்கு ரத வீதியில் பாரத... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீ... மேலும் பார்க்க

கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்... மேலும் பார்க்க

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும... மேலும் பார்க்க

தனியாரைவிட வேளாண்மைத் துறையில் விதைகள் விலை அதிகம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

வேளாண்மை துறையில் தனியாரை விட விதைகளின் விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வ... மேலும் பார்க்க

ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க