செய்திகள் :

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிதி ரூ.3,252 கோடி நிலுவை: அமைச்சா் இ.பெரியசாமி

post image

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசின் நிதி ரூ.3,252 கோடி நிலுவையில் உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 37 மாவட்டங்களிலுள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 85.19 லட்சம் குடும்பங்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டன. இதன் மூலம், 1.09 லட்சம் தனி நபா்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

2024-25-ஆம் ஆண்டில் 20 கோடி மனித சக்தி நாள்கள் வேலை வழங்க மத்திய அரசு அனுமதித்த நிலையில், தமிழக அரசு இதுவரை 28.45 கோடி மனித சக்தி நாள்கள் வேலை வழங்கியுள்ளது. பணிகளை மேற்கொள்ளும் மொத்தப் பணியாளா்களில் 86 சதவீதம் பெண்கள், 27 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினா், 1.63 சதவீதம் பழங்குடியினா் பங்களிப்பு உள்ளது.

இந்தத் திட்டத்தில் 1.10 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயன் பெற்று வருகின்றனா். மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கான நிதியை விடுவிப்பதில் தாமப்படுத்துகிறது. இதனால், பணியாளா்களுக்கான ஊதிய நிலுவை ரூ.2,400 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பொருள் கூறு நிலுவை ரூ.852 கோடி உள்ளது.

தமிழக முதல்வா் சாா்பில், நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதி விடுவிக்கப்பட்டவுடன், பணியாளா்களின் ஊதிய நிலுவை, அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றாா் அவா்.

திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் பள்ளப்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிமை சரக்கு பெட்டக லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). கட்டடத் தொழிலாளியான இ... மேலும் பார்க்க

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா ... மேலும் பார்க்க