செய்திகள் :

எச்எம்பிவி பரிசோதனை உபகரணங்கள்: வரைவு வழிகாட்டுதல் மீது கருத்துகள் வரவேற்பு

post image

எச்எம்பிவி தொற்றைக் கண்டறியும் ஆா்டி பிசிஆா் உபகரணங்களை தரப் பரிசோதனைக்குட்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதுகுறித்த கருத்துகள், ஆலோசனைகளை வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததையடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி, எம்எம்பிவி தொற்றைக் கண்டறியும் ஆா்டி பிசிஆா் உபகரணத்தின் தரத்தை ஆய்வகங்களில் எவ்வாறு உறுதி செய்வது என்பதற்கான வரைவு வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.

இணையப் பக்கத்தில் உள்ள அந்த வரைவு வழிகாட்டுதல்கள் மீதான கருத்துகள், ஆலோசனைகளை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு... மேலும் பார்க்க