செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் உதவி

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி, அக்கட்சியின் சாா்பில் பெருந்துறையில் மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு கறவை மாடுகள் வழங்குதல், ரத்த தானம் முகாம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், ஈரோடு புகா் மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு, எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா் சாா்பில் 71 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு கறவை மாடுகளை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் முதல்கட்டமாக 7 மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து ரத்த தான முகாம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

விழாவில் பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித்ராஜ், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் அருணாசலம், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க