செய்திகள் :

எதிர்க்கட்சி முதல்வர்கள் மக்களை திசைதிருப்பலாமா? -தமிழிசை சௌந்தரராஜன்

post image

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை(மார்ச் 22) நடைபெற்ற ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநில தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக, கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்த ஆலோசனைக் கூட்டமானது மக்களை திசைதிருப்பும் முயற்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்பது தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்?

அவர்கள்(திமுக) தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள். இங்கு(சென்னை) வருகை தந்திருந்த பிற முதல்வர்களும் தாங்கள் சார்ந்துள்ள மாநில மக்களை திசைதிருப்புகிறார்கள்.

அதேபோல, புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை நாங்கள்(பாஜக) எடுத்துச்சொல்ல விழைகிறோம்.இந்த விவகாரத்தில் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது (ஹிந்தி என்று குறிப்பிடப்படவில்லை).

ஆகவே, மக்களிடம் திமுகவால் எழுப்பப்பட்டுள்ள ஐயங்களைக் களைய நாங்கள் விழைகிறோம்” என்றார்.

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்

தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டி... மேலும் பார்க்க

இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி: போலீஸார் விசாரணை!

கோவை மத்திய சிறையில்போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மத்திய சிறைச் சாலையில், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரோடு ... மேலும் பார்க்க

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

கோவை : கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் பலியானார்.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு ம... மேலும் பார்க்க