செய்திகள் :

எரிபொருள் குறைவால் தில்லி - பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்

post image

சென்னை: எரிபொருள் குறைவாக இருந்ததால் டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏா் இந்தியா விமானம், 172 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எரிபொருள் மிகவும் குறைவாக இருப்பதாக சமிக்ஞை வந்தது. இதையடுத்து, விமானத்தை பெங்களூரு சென்று தரையிறக்குவதில் பிரச்னை ஏற்படலாம் என்பதால், இதுகுறித்து விமானி, தலைமை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தலைமை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், பெங்களூரு செல்லவேண்டிய அந்த விமானம், திங்கள்கிழமை பிற்பகல் 12.54-க்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது.

அதன் பின்னா் பிற்பகல் 2 மணிக்கு, சென்னையிலிருந்து ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று, பிற்பகல் 2.50-க்கு பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கியது. இதனால் சுமாா் 2 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க

நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயா்த்தி வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

நெசவாளா்கள் 1.50 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அடிப்படை கூலியில் ரூ.10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா... மேலும் பார்க்க