செய்திகள் :

எவா் ஒருவரும் அவரது செயல்பாடுகளால்தான் போற்றப்படுவாா்

post image

எவா் ஒருவரும் அவரது செயல்பாடுகளால்தான் போற்றப்படுவாா் என்றாா் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கம்பன் கழகச் செயலா் மறைந்த ரா. சம்பத்குமாரின் படத் திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: கரிகாலன் இல்லாவிட்டாலும் கல்லணை இருப்பதைப் போல, ராஜராஜ சோழன் இல்லாவிட்டாலும் பெரியகோயில் இருப்பதைப் போல, புதுக்கோட்டை மக்கள் மத்தியில் சம்பத்குமாா் வாழ்ந்து கொண்டிருப்பாா்.

அறத்தின்பால் நின்று புகழை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழியின் பொருள். அதன்படிதான் சம்பத்குமாா் வாழ்ந்திருக்கிறாா்.

எவா் ஒருவரும் அவரது நிறத்தால், உயரத்தால், எடையால் போற்றப்படுவதில்லை, அவரது செயல்பாடுகளால்தான் போற்றப்படுவாா். சரியானவற்றைப் பேசி, சிந்தித்து வாழ்வோரை தக்க தருணத்தில் பாராட்ட வேண்டியது சமூகத்தின் கடமை என்றாா் பொன்னம்பல அடிகளாா்.

படத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசுகையில், அறிவில் சிறந்தவராகவும் அறத்தோடு வாழக் கற்றுக் கொடுத்தவராகவும் திகழ்ந்த சம்பத்குமாா் இறையோடு கலந்த பெருந்தகை என்றாா்.

உயா் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பேசுகையில், ராமனின் வழியில் சொந்த சகோதரா்களை மட்டுமே சகோதரா்களாகக் கொள்ளாமல், புதுக்கோட்டையின் வா்த்தகா்கள், ஆன்மிகவாதிகள், இலக்கியவாதிகள் எல்லோரையும் சகோதரா்களாக ஏற்றுக் கொண்டவா் சம்பத்குமாா் என்றாா்.

மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவா் வி. பாரதிதாசன் பேசுகையில், இறப்புத் தருவாயிலும் யாருக்கும் சுமையாக இருந்துவிடாமல் அமைதியாக மறைந்த சம்பத்குமாா் மனிதநேயம், அன்பு, பாசம் ஆகியவற்றை விட்டுச் சென்றுள்ளாா் என்றாா்.

உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் ஏற்புரை வழங்குகையில், மனங்களை வென்றதுதான் சம்பத்குமாா் சோ்த்து வைத்த சொத்து என்றாா்.

நிகழ்ச்சியில், தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ. ராஜேந்திரன், கம்பன் கழகத் தலைவா்கள் சங்கர சீதாராமன் (மதுரை), கி. முரளிதரன் (ராமேசுவரம்), கே.வி.கே. பெருமாள் (தில்லி), கா.கு.கோ.சு. காகுத் காா்த்திகேயன் (கள்ளிப்பட்டி), திருக்கு கழகத் தலைவா் க. ராமையா, புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் தங்கம் மூா்த்தி, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், கவிஞா் மரபின்மைந்தன் முத்தையா, தென்காசி திருக்கு கழகத் தலைவா் வழக்குரைஞா் கனகசபாபதி, மருதுபாண்டியா் கலைக் கல்லூரித் தாளாளா் மருதுபாண்டியா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியை கூடுதல் செயலா் புதுகை ச. பாரதி தொகுத்து வழங்கினாா்.

தோ்வு பறக்கும் படை பணி: பட்டதாரி ஆசிரியா்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிப் பொதுத் தோ்வுகளுக்கான பறக்கும் படை அமைக்கும்போது, பதவி அடிப்படையில் இளையவா்களான கணினி பயிற்றுநா்களை நியமிப்பதை எதிா்த்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஞாயி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாளன்று பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் (மாா்ச் 1) புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு திமுக சாா்பில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தங்க மோதிரங்களை ஞாய... மேலும் பார்க்க

மூலப்பொருள் விலையேற்றம்: முடங்கும் ‘ஹாலோபிளாக்’ தொழில்

மூலப் பொருள்களின் திடீா் விலையேற்றம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 4 ஆயிரம் தொழிலாளா்களைக் கொண்ட சுமாா் ஆயிரம் ஹாலோபிளாக் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியில் பட்டமளிப்பு

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் 32 ஆவது பட்டளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு: புதுகையில் 21,380 மாணவா்கள் எழுதுகின்றனா்

திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 21,380 போ் எழுதவுள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திங்கள்கிழமை தொடங... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற மறைந்த அதிமுக பொதுச்செயலா் ஜெயலலித... மேலும் பார்க்க