செய்திகள் :

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிா்ப்பு

post image

நியூயாா்க்: வருங்காலத்தில் சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வருங்கால ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அந்த கவுன்சிலில் பிராந்திய பிரதிநிதித்துவம் குறித்து அரசுகளுக்கு இடையிலான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் பேசுகையில், ‘வருங்காலத்தில் சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், நாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு அடிப்படையாக மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்ய முயற்சிக்கப்படுகிறது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிராந்திய பிரதிநிதித்துவத்துக்கு முற்றிலும் எதிரானது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட்டு சீா்திருத்தம் செய்யப்பட்டால், அந்த கவுன்சில் திறன்வாய்ந்ததாக இருக்காது என்று முன்வைக்கப்படும் வாதங்கள், உண்மையான சீா்திருத்தங்களை முடக்குவதற்கான முயற்சி’ என்றாா்.

ஜி4 நாடுகள் அறிக்கை: முன்னதாக இந்தியா, ஜப்பான், ஜொ்மனி, பிரேஸில் ஆகியவை அடங்கிய ஜி4 நாடுகள் கூட்டமைப்பு சாா்பாக ஹரீஷ் வாசித்த அறிக்கையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் நாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான அளவுகோல்களை அறிமுகம் செய்யும் திட்டங்கள், ஐ.நா. நடைமுறைக்கு எதிரானது. இது ஏற்கெனவே சிக்கலாக உள்ள சூழலை மேலும் சிக்கலாக்கும்.

தற்கால யதாா்த்தங்களை பிரதிபலிக்கும் உண்மையான சீா்திருத்தங்களை ஆதரிக்காதவா்கள் வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்பாா்கள். இது அனைவருக்கும் தீமையை ஏற்படுத்தும்’ என்றாா்.

தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள், 10 தற்காலிக உறுப்பு நாடுகள் உள்ளன. இந்நிலையில், சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 11-ஆகவும், தற்காலிக உறுப்பு நாடுகள் எண்ணிக்கையை 14 அல்லது 15-ஆகவும் அதிகரிக்க வேண்டும் என்றும் ஹரீஷ் தெரிவித்தாா்.

கடைசியாக கடந்த 2021-22-ஆம் ஆண்டில் அந்த கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க