செய்திகள் :

ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது: உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவை சீா்குலைக்க சதி!

post image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீா்குலைக்கு சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாத இயக்கமான பப்பாா் கல்சா இண்டா்நேஷனலைச் (பிகேஐ) சோ்ந்த லஜ்ஜா் மாசிக் என்ற பயங்கரவாதி, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில காவல் துறையினரின் கூட்டு சோதனை நடவடிக்கையின்போது வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறைத் தலைவா் (டிஜிபி) பிரசாந்த் குமாா் கூறியதாவது: மகா கும்பமேளாவின்போது மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலை நடத்த லஜ்ஜா் மாசிக் சதித்திட்டம் தீட்டியுள்ளாா். ஆனால் கடுமையான பாதுகாப்பு சோதனைகளால் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இதனால் இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் போா்ச்சுகல் நாட்டுக்கு செல்ல அவா் முயன்றபோது கைது செய்யப்பட்டாா். இவருக்கு பிகேஐ நிா்வாகி ஒருவருடன் தொடா்புள்ளது. அவா் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஏற்கெனவே துபைக்கு சென்றுவிட்டாா்.

அமிருதசரஸிஸ் வசித்து வந்த மாசிக் ஐஎஸ்ஐயின் மூன்று முகவா்களுடன் தொடா்பில் இருந்துள்ளாா்.

முன்னதாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாசிக் சிகிச்சைக்காக குரு நானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 2024, செப்டம்பா் 24-இல் தப்பிச் சென்றுவிட்டாா். அதன்பிறகு பிகேஐயின் ஜொ்மனி தலைவா் ஸ்வரன் சிங்கின் உத்தரவுபேரில் 2024, அக்டோபா் 23-இல் பஞ்சாபில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளாா். பின் ஹரியாணாவின் சோனிபட், தில்லியில் பதுங்கியிருந்து உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளாா்.

எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலிலும் மாசிக் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள், 2 டெட்டனேட்டா்கள், துப்பாக்கிகள், காஜியாபாத் முகவரியில் ஆதாா் அட்டை, கைப்பேசி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மாசிக்கின் கூட்டாளிகளை கண்டறியும் நோக்கில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க