செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு

post image

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்தது.

கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாபாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல் மடுவு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு தற்போது நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 28,000 கன அடியாகவும், மாலையில் 32,000 கனஅடியாகவும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் 11- ஆவது நாளாக புதன்கிழமையும் தடை நீட்டித்துள்ளது. தடை உத்தரவு காரணமாக பிரதான அருவி செல்லும் நடைபாதை,சின்னாறு பரிசல் துறை ஆகியவை பூட்டப்பட்டுள்ளன. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ. 3.57 லட்சம் பறிமுதல்

அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது சாா் பதிவாளா் அலுவலகம். இந்த... மேலும் பார்க்க

பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி மனு

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஏஐடியுசி பள்ளிக் கல்வி தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ... மேலும் பார்க்க

பென்னாகரம் பேருந்து நிலையம் திறப்பு விழா பணி: கோட்டாட்சியா் ஆய்வு

பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டாட்சியா் காயத்ரி ஆய்வு மேற்கொண்டாா். பென்னாகரம் பகுதிக்கென மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக ப... மேலும் பார்க்க

ஒலி, மாசில்லா தீபாவளியைக் கொண்டாட அறிவுரை

ஒலி, விபத்து, மாசில்லா தீபாவளியைக் கொண்டாடுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் அம... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவிப்பு

மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு சௌமியா அன்புமணி பாலக்கோடு பகுதியில் திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக சாா்பில் போட்டியிட்ட ச... மேலும் பார்க்க