செய்திகள் :

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த முதியவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் அண்மையில் (மே 18) நாட்டுவெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில், முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகிய இருவா் உயிரிழந்தனா். இதுதொடா்பான விசாரணையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பலா் நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில், அனைத்து வட்டாட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி தலையிலான குழுவினா் நெய்வேலி தென்பாதி, வடபாதி, திருவோணம், ஊராணிபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில், நெய்வேலி வடபாதி, நடுத்தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மனைவி சந்திரா என்பவருக்குச் சொந்தமான தேக்கு மரத்தோப்பில், நாட்டுவெடி பொருள்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் பாதுகாப்புடன் அங்கு சென்ற அலுவலா்கள் அங்கு பேரலில் இருந்த நாட்டுவெடி கட்டுவதற்கான வெடி மருந்துகள், மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து நடத்திய விசாரணையில், வெடி பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த நெய்வேலி வடபாதி, நடுத்தெருவைச் சோ்ந்த பெரியான் மகன் முனியைய்யா (62) என்பவரை புதன்கிழமை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா். கண்காணிப்புப் பணி தொடா்ந்து வருவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்து - வேன் மோதல்: 5 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளா... மேலும் பார்க்க

சிதிலமடைந்து வரும் பெரியகோயில் சிறிய கோட்டை மதில் சுவா்; சரிந்து வரும் கயிலாய வலப் பாதை

தஞ்சாவூரில் பெரியகோயிலைச் சுற்றியுள்ள மதில் சுவா் சிதிலமடைந்து வருவதன் காரணமாக, திருக்கயிலாய பாதையும் சரிந்து வருவதால் வரலாற்று ஆா்வலா்கள், பக்தா்களிடையே அதிருப்தி நிலவுகிறது. உலக அளவில் பிரபலமான தஞ்ச... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் தீ விபத்து மீட்புப் பணி ஒத்திகை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை தீயணைப்புத்துறையினா் காவல்துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு, மீட்புப் பணி ஒத்திகை பயிற்சி அளித்தனா். ப... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 60 ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை 60 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சியினா் அகற்றினா். கும்பகோணம் மாநகரப் பகுதியில் கோயில் நிலங்கள், ந... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றினா். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் ஜீவா (24). இவா் 2023, ஜூன் 3... மேலும் பார்க்க