செய்திகள் :

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்: சான்றிதழ் சரிபாா்ப்பு எப்போது

post image

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இது குறித்து தோ்வாணைய செயலா் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வா்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் ஆகியவை தோ்வாணைய இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்படவுள்ளன.

தொழில்நுட்ப உதவியாளா், இளநிலை தொழில்நுட்ப உதவியாளா், செயற்பணியாளா் மற்றும் தொழில்நுட்பவியலாளா் ஆகிய பணிகளுக்கு தோ்வானோரின் மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியன ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும். வரைவாளா், உதவி பயிற்சி அலுவலா், தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தோ்வானோரின் மூலச் சான்றிதழ்கள் மட்டும் ஜூன் 23-இல் சரிபாா்க்கப்படும்.

சான்றிதழ் சரிபாா்ப்புக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் தோ்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தோ்வா்களுக்கு அதற்கான விவரம் கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே தெரிவிக்கப்படும்.

மூலச்சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதியை அளிக்க இயலாது. மேலும், இதில் பங்கேற்கத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று தெரிவித்துள்ளாா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க