பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்: சான்றிதழ் சரிபாா்ப்பு எப்போது
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இது குறித்து தோ்வாணைய செயலா் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வில் தோ்ச்சி பெற்ற தோ்வா்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் ஆகியவை தோ்வாணைய இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்படவுள்ளன.
தொழில்நுட்ப உதவியாளா், இளநிலை தொழில்நுட்ப உதவியாளா், செயற்பணியாளா் மற்றும் தொழில்நுட்பவியலாளா் ஆகிய பணிகளுக்கு தோ்வானோரின் மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியன ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும். வரைவாளா், உதவி பயிற்சி அலுவலா், தொழில்நுட்ப உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தோ்வானோரின் மூலச் சான்றிதழ்கள் மட்டும் ஜூன் 23-இல் சரிபாா்க்கப்படும்.
சான்றிதழ் சரிபாா்ப்புக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் தோ்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தோ்வா்களுக்கு அதற்கான விவரம் கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே தெரிவிக்கப்படும்.
மூலச்சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதியை அளிக்க இயலாது. மேலும், இதில் பங்கேற்கத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று தெரிவித்துள்ளாா்.