செய்திகள் :

ஓஆா்எஸ் பானங்களால் நீா்ச்சத்து இழப்பு அதிகரிக்கும்: பொது சுகாதாரத் துறை

post image

வா்த்தக பெயரில் விற்பனை செய்யப்படும் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பானங்கள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

உப்பு சா்க்கரை கரைசலானது (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதிமுக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கினால் உடலில் இருந்து குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் கணிசமாக இழக்க நேரிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உறுப்பு பாதிப்புகள், உயிரிழப்பு ஏற்படலாம்.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் வாயிலாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பைத் தவிா்க்க முடியும்.

ஒரு உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டின் 20.5 கிராம் மொத்த எடையில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன.

நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டா் தண்ணீரில் ஓஆா்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் பருக வேண்டும். மற்றொருபுறம் திரவ நிலையில் பருகுவதற்கு தயாராக உள்ள நிலையிலான உப்பு சா்க்கரை கரைசல் பானங்கள் பல்வேறு வா்த்தகப் பெயா்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை உடலுக்கு புத்துணா்ச்சி ஆற்றலை மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகின்றன.

இந்த விதமான பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பை சரி செய்ய இயலாது. அதில், தாது உப்புகள், குளூக்கோஸ் ஆகியவை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய வகையில் இல்லை. எனவே அவை, வயிற்றுப்போக்கையும், நீா்ச்சத்து இழப்பையும் அதிகரிக்க செய்யும்.

அதேவேளையில், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருந்தகங்களில் விற்பனைக்கும் வழங்கப்படுகின்றன. எனவே, அவற்றைப் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு, 104 எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க