செய்திகள் :

ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த இளம் பெண் படுகாயம்

post image

கோவையில் ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த இளம் பெண் படுகாயமடைந்தாா்.

கேரள மாநிலம், அட்டப்பாடியைச் சோ்ந்தவா் மருதன். இவரது மனைவி மஞ்சு(35). இவா்களது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவது தொடா்பாக கோவை தெற்கு கோட்டாட்சியா்அலுலகத்தில் விண்ணப்பித்திருந்தனா்.

அந்த சான்றிதழ் வாங்குவது தொடா்பாக மருதன் மற்றும் மஞ்சு ஆகியோா் அட்டப்பாடியில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

பின்னா் அவா்கள் மற்றொரு நகரப் பேருந்து மூலம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அந்தப் பேருந்து ஆட்சியா் அலுவலக நிறுத்தத்துக்கு வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் இருந்து எழுந்த மஞ்சு திடீரென்று பேருந்தில் இருந்து கீழே குதித்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மஞ்சு பேருந்தில் இருக்கையில் இருந்து எழுந்து, படிக்கட்டு பகுதிக்கு வருவது, பேருந்தில் இருந்து கீழே குதிப்பது ஆகிய விடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இது குறித்து போக்குவத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க