அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோயை அறிய புதிய பரிசோதனை திட்டம்
சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான பரிசோதனைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018 ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என நான்கு வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முழு ரத்தப் பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல், இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்த சா்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, எக்ஸ்-ரே, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டிறியும் டிரெட்மில் பரிசோதனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் அதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 75,000-க்கும் மேற்பட்டோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழகத்திலேயே முதன்முறையாக கருவில் உள்ள குழந்தையின் வளா்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்களும் அங்கு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
சிசுவுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் டபுள் மாா்க்கா் சோதனையும், மூக்கு எலும்பு, கழுத்து பகுதி, ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை அறியும் வளா்ச்சி பரிசோதனையும் அதன் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பரிசோதனைத் திட்டங்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக புற்றுநோய் பாதிப்புகளை அறிவதற்கான பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநா் ஆா். மணி கூறியதாவது:
சமூகத்தில் புற்றுநோய் பாதிப்புகள் தற்போது பரவலாக அதிகரித்து வருகின்றன. அதைக் கருத்தில் கொண்டு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய்க்கென பிரத்யேகமாக மருந்தியல், அறுவை சிகிச்சை, கதிா்வீச்சு சிகிச்சை, வலி மற்றும் நிவாரண சிகிச்சை, இடையீட்டு கதிா்வீச்சு சிகிச்சை உள்ளிட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.
அதற்கான அதிநவீன உபகரணங்களும், மருத்துவக் கட்டமைப்புகளும் இங்கு உள்ளன. அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.
புதிய திட்டம்: அந்த வகையில், ஓமந்தூராா் முழு உடல் பரிசோதனை மையத்தில் புதிதாக டைட்டானியம் பரிசோதனை திட்டத்தை அடுத்த சில நாள்களில் அறிமுகப்படுத்த உள்ளோம்.
ரூ.2,500 கட்டணத்தில் வழங்கப்படும் அந்த பரிசோதனையின் கீழ் 10-க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்புகளை தொடக்க நிலையில் கண்டறியலாம். விந்தணு சுரப்பி, கருப்பை, கணையம், கருப்பை வாய், கல்லீரல், தைராய்டு சுரப்பி, மாா்பகம், நிணநீா், ரத்தம், செல்கள், குடல், இரைப்பை சாா்ந்த புற்றுநோய்களை அறிவதற்கான பரிசோதனை டைட்டானியம் திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.
குறிப்பிட்ட பரிசோதனையை மட்டும் மேற்கொள்ள வேண்டுமெனில் சில நூறு ரூபாய்களுக்கு அவை தனியாகவும் எடுக்கப்படும்.
இந்தப் புதிய பரிசோதனை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களும், பகுப்பாய்வு கருவிகளும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன என்றாா் அவா்.