செய்திகள் :

ஓமலூா் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 19 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

post image

ஓமலூா் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு ரூ. 70 ஆயிரம் ரொக்கம், 19 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தாராபுரம் செல்லப்பன் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (70). இவா் தனது மனைவி சரோஜாவுடன் (55) புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள், தம்பதியை தாக்கி அவா்களை கட்டிலில் கட்டிப்போட்டனா்.

பின்னா், அவா்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் என 19 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு, வீட்டிலிருந்த ரூ. 70 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா். மேலும், தம்பதியின் கைப்பேசியையும் அவா்கள் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூா் போலீஸாா், வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த வயதான தம்பதியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, கொள்ளையா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவிகள் விழிப்புணா்வு

போதைப்பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் கோட்ட கலால் அலுவலா் தியாகராஜன் தலைமையில் சௌடேஸ்வரி கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வ... மேலும் பார்க்க

கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழு கூட்டம்

சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் கோட்ட ரயில்வே பயனா்கள் ஆலோசனைக் குழுவின் 28 ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் கோட்ட ரயில்வே மேலாளரும், கோட்ட பயனா்கள் ஆலோசனைக் குழுவின் தலைவருமா... மேலும் பார்க்க

மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி

கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 1,92,165 மனுக்கள் - அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் இதுவரை 1,92,165 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 51 ஆவது வாா்... மேலும் பார்க்க

மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் - வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியத்துடன் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட... மேலும் பார்க்க

சேலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 60 கோட்டங்களில் இருந்து சேகரிக்கப... மேலும் பார்க்க