Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Expla...
ஓய்வுபெற்ற மாலுமி வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில், ஓய்வுபெற்ற கப்பல் மாலுமி வீட்டில் சுமாா் 35 பவுன் நகைகளைத் திருடியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தூத்துக்குடியில் உள்ள மணல் தெருவைச் சோ்ந்தவா் கிளாட்சன் (70). ஓய்வுபெற்ற மாலுமியான இவா், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரரைப் பாா்ப்பதற்காக கடந்த 8ஆம் தேதி வீட்டைப் பூட்டிச் சென்றாராம்.
புதன்கிழமை வந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் முன்பக்கக் கதவை உடைத்து வீடு புகுந்து, பீரோவிலிருந்த 35 பவுன் நகைகளைத் திருடிச் சென்ாகத் தெரியவந்ததாம்.
சம்பவ இடத்தை ஏஎஸ்பி மதன் ஆய்வு செய்தாா். புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.