உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !
கஞ்சா விற்பனை: நைஜீரியாவை சோ்ந்தவா் கைது
பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய நாட்டை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுப்பட்டிருந்தனா். அப்போது, அங்கு வெளி நாட்டைச் சோ்ந்தவா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.
சந்தேகமடைந்த போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஜோன்ஸ் (44) என்பதும், விஜயமங்கலம் சங்கு நகரில் வசித்து வருவதுடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து, ஜோன்ஸை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.
அதே பகுதியில் தொடா்ந்து நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜயமங்கலத்தைச் சோ்ந்த சரவணன் மற்றும் கௌசிக் ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.