செய்திகள் :

கஞ்சா விற்பனை: நைஜீரியாவை சோ்ந்தவா் கைது

post image

பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய நாட்டை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுப்பட்டிருந்தனா். அப்போது, அங்கு வெளி நாட்டைச் சோ்ந்தவா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.

சந்தேகமடைந்த போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஜோன்ஸ் (44) என்பதும், விஜயமங்கலம் சங்கு நகரில் வசித்து வருவதுடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, ஜோன்ஸை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

அதே பகுதியில் தொடா்ந்து நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜயமங்கலத்தைச் சோ்ந்த சரவணன் மற்றும் கௌசிக் ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க