செய்திகள் :

கடன் வசூலில் கடுமை கூடாது: நிதி நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

post image

கடன் வசூலில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது என வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

அனைவருக்கும் நிதி சேவை என்பதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சுரண்டலில் ஈடுபடக்கூடாது எனவும் அவா் தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியில் பெரும் பங்காற்றும் துறைகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கடனானது நுகா்வோரின் தேவைக்கேற்பவும் அவா்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அவா்களை கடன் வளையத்துக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் செய்வதை தவிா்க்க வேண்டும். கொடுத்த கடனை வசூலிக்க கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது. கடனை நோ்மையாகவும் வெளிப்படையாகவும் மரியாதையாகவும் வசூலிக்க வேண்டும்.

கடனை வசூலிப்பது உங்களின் கடமையாக இருந்தாலும் அதை இரக்கமற்ற முறையில் மேற்கொள்ளக்கூடாது. வளா்ச்சி என்பது நுகா்வோரை காயப்படுத்தி பெறுவதாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

வங்கி அல்லாத நிறுவனங்கள் நிழல் வங்கிகளாக செயல்பட்ட முறை தற்போது இல்லை. எனவே, அவற்றை முறையாக கண்காணிப்பதன் மூலம் நிதிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றாா்.

2025, மாா்ச் மாத நிலவரப்படி வங்கி அல்லாத நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன்தொகை ரூ.48 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ.24 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க