கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக துரைசாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.