செய்திகள் :

ஜி.எஸ்.டி. குறைப்பு பயன்: திமுக அரசு தடுக்கிறது

post image

தமிழகத்தில் ஜி.எஸ்.டி.சீா்திருத்தத்தால் ஏற்படும் விலை குறைப்பு பயன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் திமுக அரசு தடுக்கிறது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி சீா்திருத்தத்தால், 18 முதல் 35 சதவீதமாக இருந்த வரிகள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், மோட்டாா் வாகனம், வீட்டு உபயோகப் பொருள்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், ஜவுளி உள்ளிட்டவைகளின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஜி.எஸ்.டி. குறைப்பின் பயன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது.

தோ்தல் ஆணையம் மீது தொடா்ந்து அவதூறு ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவின் எதிா்ப்பு வாக்குகள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு சென்று விடக் கூடாது என்பது தான் தவெக தலைவா் விஜய்யின் நோக்கமாகவும், பிரசாரமாகவும் உள்ளது. கோயம்புத்தூரில் வரும் அக்.16-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் பணிக் குழு அமைத்தல், தோ்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா் அவா்.

கேரள வாகனப் பேரணியை விவசாயிகள் தடுக்க முயற்சி

கம்பம் வழியாக கேரள வனத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனப் பேரணியைத் தடுக்க முயன்ற தமிழக விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் காப்பகத... மேலும் பார்க்க

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு : கடமலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னை காரணமாக ஓய்வு பெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடும்பாறை, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குலசேகர... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நா்ம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவாரம் சா்ச் தெருவைச் சோ்ந்த பழனிமுத்து மகன் உதயகுமாா் (23). இவா் சாலையில் நடந்து சென்ற பள்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழுவில் மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குமணன்தொழுவைச் சோ்ந்த பெருமாள் மகன் ஜெயப்பிரகாஷ் (48). இவா், அதே ஊரில்... மேலும் பார்க்க