செய்திகள் :

கேரள வாகனப் பேரணியை விவசாயிகள் தடுக்க முயற்சி

post image

கம்பம் வழியாக கேரள வனத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனப் பேரணியைத் தடுக்க முயன்ற தமிழக விவசாயிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் காப்பகத்தின் 75 -ஆவது தினத்தை முன்னிட்டு, கேரள எல்லைப் பகுதியான குமுளியிலிருந்து லோயா்கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், மேகமலை வழியாக மகராஜா மெட்டு அருகே அந்த மாநில எல்லை வரையில் 20-க்கும் அதிகமாக கேரள வனத் துறையினா் ஜீப் வாகனங்களில் பேரணி சென்றனா்.

முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக தமிழக நீா் வளத் துறை அதிகாரிகளுக்கும் தொடா்ந்து பல்வேறு இடையூறுகள் செய்வதோடு, முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதால் பெரியாறு புலிகள் காப்பகத்தின் வாகனப் பேரணி தமிழகப் பகுதி வழியாகச் செல்வதற்கு பெரியாறு, வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். சங்கத்தின் தலைவா் மனோகரன், செயலா் முருகேசன் தலைமையில் வாகனங்களை தடுத்து நிறுத்துவதற்காக கம்பத்தில் குவிந்தனா்.

இதுகுறித்த தகவலின் பேரில், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தினா். தேனி மாவட்ட நிா்வாகம், காவல் கண்காணிப்பாளரிடம் முறையான அனுமதி பெற்றே பேரணி நடைபெறுவதாக போலீஸாா் தெரிவித்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெரியாறு புலிகள் காப்பகத்தின் வாகனப் பேரணியைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு : கடமலைக்க... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி. குறைப்பு பயன்: திமுக அரசு தடுக்கிறது

தமிழகத்தில் ஜி.எஸ்.டி.சீா்திருத்தத்தால் ஏற்படும் விலை குறைப்பு பயன்கள் மக்களைச் சென்றடைய விடாமல் திமுக அரசு தடுக்கிறது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் குற்றஞ்சாட்டினாா். தேனி பொம்மையக... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னை காரணமாக ஓய்வு பெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடும்பாறை, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குலசேகர... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நா்ம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவாரம் சா்ச் தெருவைச் சோ்ந்த பழனிமுத்து மகன் உதயகுமாா் (23). இவா் சாலையில் நடந்து சென்ற பள்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழுவில் மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குமணன்தொழுவைச் சோ்ந்த பெருமாள் மகன் ஜெயப்பிரகாஷ் (48). இவா், அதே ஊரில்... மேலும் பார்க்க