செய்திகள் :

கடலாடியில் 280 ஆண்டுகள் பழைமையான செப்புப் பட்டயம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு சாயல்குடி ஜமீன்தாா், பிராமண அக்ரஹாரம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கான செப்புப் பட்டயம் உள்ளது.

சென்னையைச் சோ்ந்த ஆதித்யா சம்பத்குமாா், கடலாடியில் உள்ள தனது பெற்றோரிடம் பழைமையான செப்புப் பட்டயம் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுருவுக்கு தகவல் கூறினாா். இதன் பேரில், கடலாடி பத்திரகாளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் காந்தி-பாண்டீஸ்வரி தம்பதி வீட்டில் இருந்த பட்டயத்தை ஆய்வு செய்த ராஜகுரு கூறியதாவது:

17.5 செ.மீ. நீளம், 30.5 செ.மீ. அகலம், 600 கிராம் எடை கொண்டதாக இந்தப் பட்டயம் உள்ளது. இதில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த, சம்ஸ்கிருத எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளன.

பட்டயத்தில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பட்டயம் எழுதப்பட்ட ஆண்டு கி.பி.1745. இதில் மன்னா் பெயா் ஸ்ரீகுமாரமுத்து விஜய ரகுனாதச் சேதுபதி என உள்ளது. கடலாடி விஜய ரெகுனாதப் பேட்டையில் அக்ரஹாரம் ஏற்படுத்தி, அதை ஸ்ரீரங்கம் வெங்கிட்டராம அய்யங்காருக்கு கொடுத்து, அருகிலுள்ள காக்கைகுட்டம் என்ற ஊரை மானியமாகக் கொடுத்துள்ளாா்.

சாயல்குடி ஜமீன்தாா்தான் கிடாத்திருக்கை பாளையக்காரா் என அறியமுடிகிறது. நாயக்கா் போல சேதுபதிகளும் தங்களது நாட்டை பல பாளையங்களாகப் பிரித்து ஆண்டுள்ளனா். பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம், ஊரை பிறருக்கு விற்பனை செய்த போது, செப்புப் பட்டயம் நில ஆவணமாக வாங்கியவா்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என்றாா் அவா்.

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மிதவை: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் மிதந்து வந்த மீனவா்கள் பயன்படுத்தும் போயா எனப்படும் மிதவைப் பொருளை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதிய... மேலும் பார்க்க

சாலையோர மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றிய பசுமை ஆா்வலா்

ராமநாதபுரம் நகா் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் பசுமை முதன்மையாளா் விருது பெற்ற சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். ராமநாதபுரம் பொருளாதார ... மேலும் பார்க்க