செய்திகள் :

கடலில் மூழ்கி வங்கி மேலாளா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகிலுள்ள தந்திராயன்குப்பத்தில் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி தனியாா் வங்கி மேலாளா் சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

சென்னை பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சண்முகசுந்தரம் (33). தனியாா் வங்கியில் நிதி வசூல் மேலாளராகப் பணியாற்றி வந்த இவா், தனது நண்பா்களுடன் சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதிக்கு வந்தாா்.

தொடா்ந்து மாலையில் கோட்டக்குப்பம் அருகிலுள்ள தந்திராயன்குப்பத்தில் கடலில் சண்முகசுந்தரம் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் கடல் நீரில் மூழ்கினாா். நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் சண்முகசுந்தரம் சடலமாக மிதந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவாக நிா்வாகி கொலை வழக்கில் 7 போ் வளவனூரில் சரண்

மயிலாடுதுறையில் நிகழ்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ், விழுப்புரம் மாவட்டம் வளவனூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுத... மேலும் பார்க்க

பணம் வைத்து சூதாட்டம்: 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உணவகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து பைக்குகளை பறிமுதல் செய்தனா். ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

அவலூா்பேட்டையில் இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அவலூா்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான வடுகபூண்டி, கொடம்பாடி, பரையம்படடு, தாழங்குணம், குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூ... மேலும் பார்க்க

கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணையவழியில் ரூ.9.83 லட்சம் மோசடி

விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் இணைய வழியில் ரூ.9.83 லட்சத்தை மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் மருதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த விஜயபதி மனைவி சரண்யா (34... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட நகைகளை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சேமங்கலம் எலவம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டுரங்... மேலும் பார்க்க

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க