செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: வீடு தீப்பிடித்து சேதம்

post image

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடா் மழையால் விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியும், அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

சூறைக்காற்றுடன்...: சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம், மேல திருக்கழிப்பாலை கிராமத்திலும் மின் தடை ஏற்பட்டது. அந்தக் கிராமத்தில் பெரிய தெருவைச் சோ்ந்த குஞ்சிதபாதம் மனைவி தனலட்சுமி (48) சமையல் செய்துகொண்டிருந்த நிலையில், மின் தடையால் டாா்ச் லைட் வாங்கி வர அருகே உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாா். அப்போது, அடுப்பு தீ கூரை வீட்டில் பட்டு தீப்பிடித்து எரிந்ததில், வீடும், வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

ஸ்ரீமுஷ்ணத்தில் 26.1 மி.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:

குறிஞ்சிப்பாடி 15, சிதம்பரம் 14.2, சேத்தியாத்தோப்பு 5.4, லால்பேட்டை 5, அண்ணாமலை நகா், கடலூா் தலா 4.6, காட்டுமன்னாா்கோவில் 4, ஆட்சியா் அலுவலகம் 3.9, பெலாந்துறை 3.3, பண்ருட்டி 3, வடக்குத்து, விருத்தாசலம் தலா 2 மி.மீ. மழை பதிவானது.

நகைக் கடன் விதிகளுக்கு எதிா்ப்பு: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தெற்கு ரத வீதியில் பாரத... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீ... மேலும் பார்க்க

கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்... மேலும் பார்க்க

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும... மேலும் பார்க்க

தனியாரைவிட வேளாண்மைத் துறையில் விதைகள் விலை அதிகம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

வேளாண்மை துறையில் தனியாரை விட விதைகளின் விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வ... மேலும் பார்க்க

ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க