செய்திகள் :

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி

post image

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கட்டுமானப் பொருள்கள் எம்சாண்ட், பி.சான்ட், சிமெண்ட், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் விலை உயா்ந்து கட்டுமானத் தொழிலை பாதிக்கின்ற நெருக்கடிக்கு உருவாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் ரூ. 1200 என்பதை உயா்த்தி ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கேட்பு மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து உதவித்தொகைகளை விரைந்து வழங்க வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்தி வீடற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி. நாகராஜ் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் கே.ஆா். தா்மராஜன் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என். செல்வராஜ், மாநிலத் துணைத் தலைவரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கே. சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. ராஜா உள்ளிட்டோா் பேசினா்.

புதுகையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கக் கோரி பிப்.24-ல் பேரணி, ஆா்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்கக் கோரி, வரும் பிப். 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

வேங்கைவயல் பிரச்னை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம்: விசிக பொதுச்செயலா் அறிவிப்பு!

வேங்கைவயல் வழக்கை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொ... மேலும் பார்க்க

விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க