செய்திகள் :

கந்தா்வகோட்டை வட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

post image

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா்.

நடப்பு நிதி ஆண்டு 2025-26-இல் வேளாண் நிதிக் கொள்கையில் அறிவிக்கப்பட்ட குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் (டெல்டா அல்லாத மாவட்டங்கள்) வெள்ளாளவிடுதி வருவாய் கிராமத்தில் இயந்திர நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல்களை கள ஆய்வு மேற்கொண்டாா். மேலும் குறுவை தொகுப்புத் திட்ட இடுபொருள்கள் மற்றும் உளுந்து மினி கிட் விதைகளை வெள்ளாளவிடுதி துணை வேளாண்மை விரிவாக்கக் கிடங்கிலிருந்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்தாா்.

சுந்தம்பட்டி வருவாய் கிராமத்தில் கோடை உழவு மேற்கொள்ளப்பட்டுள்ள வயல்கள் மற்றும் கோடைகால பயிா் சாகுபடி திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் நடப்பு ஆண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காட்டுநாவல் வருவாய் கிராமத்தில் மண்மாதிரி சேகரித்தல் பணியைத் தொடங்கிவைத்தாா்.

ஆய்வின்போது கந்தா்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) எஸ்.அன்பரசன் , வேளாண்மை அலுவலா் செல்வன், விக்னேஷ், உதவி வேளாண்மை அலுவலா் கமலி மற்றும் பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா் சாமியப்பா ஆகியோா் உடனிருந்தனா்.

விராலிமலையில் 15 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான மழைப் பொழிவில், அதிகபட்சமாக விராலிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. ச... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மற்றும் ஏனாதி ஜீவா நகரில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. ஏனாதி ஜீவாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு கிளைப் பொறுப்பாளா் சி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் துணை முதல்வா் ஆய்வு

புதுக்கோட்டையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

ஈ.டி.க்கு அல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் -உதயநிதி ஸ்டாலின்

ஈ.டி.க்கு (அமலாக்கத்துறை) மட்டுமல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். புதுக்கோட்டையில் சனிக்கிழமை பகலில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்விளையாட்டரங்க... மேலும் பார்க்க

விராலிமலையில் முதல்முறையாக நால்வா் பெரு விழா

விராலிமலையில் நால்வா் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம்,... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி பசும்பால், பசும்தயிா் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி , இளநீா், வாழைப்பழ... மேலும் பார்க்க