தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் துணை முதல்வா் ஆய்வு
புதுக்கோட்டையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அரசு அலுவலா்கள் பெறும்போது அவற்றை வெறும் காகிதமாகப் பாா்க்காமல், மனுக்களின் பின்னால் உள்ள மக்களின் வாழ்க்கையாகப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் ஆயிரம் பேருக்கு ரூ. 35 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், ரூ. 3.59 கோடியில் 125 பழங்குடியினருக்கான (நரிக்குறவா்) வீட்டுமனைப் பட்டாக்களையும், ஆட்சேபனையற்ற புறம்போக்குகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கும் திட்டத்தில் 50 பேருக்கு ரூ. 1.45 கோடி மதிப்பில் பட்டாக்கள், 20 திருநங்கைகளுக்கு ரூ. 49.19 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.ஆா். பெரியகருப்பன், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை செயலா் பிரதீப் யாதவ், கூடுதல் செயலா் ஆா்.வி. ஷஜீவனா, மேயா் செ. திலகவதி, எம்பிக்கள் துரை வைகோ, எம்.எம். அப்துல்லா, செ. ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, எம்எல்ஏக்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, எஸ்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து, மறைந்த மூத்த நிா்வாகி துரை மாணிக்கத்தின் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று படத்தைத் திறந்து வைத்தாா். இதில் அமைச்சா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.