செய்திகள் :

கனடா: நடுவானில் பயிற்சி விமானங்கள் மோதல் - இந்திய மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சிறிய இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியா மற்றும் கனடாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.

மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் இருந்து 50 கி.மீ. தென்கிழக்கில் ஸ்டெயின்பேக் பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நேரிட்டது. ‘ஹாா்வ்ஸ் ஏா்’ விமானி (பைலட்) பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்த இந்திய மாணவா் ஸ்ரீஹரி சுகேஷும், கனடா மாணவா் சுவானோ மே ராய்ஸும் ஒற்றை இருக்கையுடன் கூடிய சிறிய இரு பயிற்சி விமானங்களில் ஓடுதளத்தில் இருந்து மேலே பறப்பது மற்றும் தரையிறங்குதல் தொடா்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக இருவரின் விமானங்களும் நடுவானில் மோதி கீழே விழுந்தன. இதில் இரு மாணவா்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய மாணவரின் இறப்பை டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க